வீட்டில் கண்ணாடி உடைந்தால் நல்லதா? கெட்டதா? உண்மை என்னனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!!

First Published May 22, 2023, 9:54 AM IST

கண்ணாடி உடைவது நல்ல சகுனமா? அல்லது அசுபமா என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள். 

உலகெங்கிலும் உள்ள மக்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். அதில் மதரீதியாக பல்வேறு நம்பிக்கைகள் உள்ளது. இந்தியாவில் சுப, அசுபமானவை என சில விஷயங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நாய் அழுவது, பூனை குறுக்கே செல்வது, இரவில் நகங்களைக் கடிப்பது போன்றவை பலரால் அசுபமாகக் கருதப்படுகின்றன. அதேபோல், கண்ணாடிப் பொருளை உடைப்பதும் பலரால் அசுபமாக கருதப்படுகிறது. ஆனாலும் கண்ணாடியை உடைப்பது நல்ல பலனையும் தரும் என்று சிலர் நம்புகிறார்கள். கண்ணாடியை உடைப்பது பற்றி வாஸ்து, ஜோதிடம் கொண்டுள்ள நம்பிக்கைகளை இங்கு காணலாம். 

ஜோதிடம், வாஸ்து இரண்டிலும் கண்ணாடி வெவ்வேறு கண்ணோட்டங்களில் கண்ணாடி உடைதல் பார்க்கப்படுகிறது. அதேபோல் கண்ணாடி தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஃபெங் சுய்யில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வாஸ்து, ஜோதிடத்தின் படி, கண்ணாடி உடைவது சில சமயங்களில் அசுபமாகவும், சில சமயங்களில் அசுபமாகவும் இருக்கும். இந்து மதத்தை பொறுத்தவரை கண்ணாடியை உடைப்பது அசுபமான அம்சம். ஏனெனில் ஏதாவது உடைந்தால் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நாம் வீட்டில் உடைந்த பொருளை வைத்திருந்தால் அது வீட்டின் நேர்மறை ஆற்றலை கெடுக்கும். அப்படியானால் கண்ணாடி உடைந்தல் நல்ல சகுனம் இல்லையா? அப்படி சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் கண்ணாடி உடைதல் நல்ல சகுனம் தான். வீட்டில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி அல்லது கண்ணாடியில் செய்யப்பட்ட பொருள் திடீரென உடைந்தால், நீங்கள் பொருளாதார நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இது பெரிய நெருக்கடியின் அறிகுறியாகும். 

இன்னொரு புறம் வீட்டின் ஜன்னல்கள், கதவுகளில் திடீரென கண்ணாடி உடைந்தாலோ அல்லது விரிசல் ஏற்பட்டாலோ, எதிர்காலத்தில் நீங்கள் சில பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அறிகுறியை வெளிப்படுத்துகிறது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

ஒவ்வொருவரின் படுக்கையறையிலும் கண்ணாடி உடைந்தாலோ அல்லது விரிசல் ஏற்பட்டாலோ நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். ஏதோ ஒரு பெரிய பிரச்சினை உங்களுக்கு வரப்போகிறது என்ற அறிகுறி. 

உடைந்த கண்ணாடியை என்ன செய்வது? 

இந்து மதத்தினர் உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது அசுபமாக கருதுகிறார்கள். அத்தகைய சூழலில், கண்ணாடி உடைந்தால், அதை உடனடியாக வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். கண்ணாடி தனக்குத்தானே பிரச்சனையை எடுத்துக் கொள்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்படப்போகும் பேரிடர் அந்த கண்ணாடியில் வந்துவிடும். உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தால், பேரழிவு வீட்டில் இருக்கும். 

கண்ணாடி; வாஸ்து குறிப்புகள் 

வட்டமான, நீள்வட்டமான கண்ணாடிகளை வீட்டில் வைக்க வேண்டாம். இது நேர்மறை ஆற்றலை வரவிடாது. வீட்டில் எப்போதும் சதுரக் கண்ணாடிகளை வைத்திருங்கள். கண்ணாடி பிம்பத்தில்

மூடிய கதவு எப்பொழுதும் காணப்படாமல் இருக்கும் வகையில் கண்ணாடியை வைக்கவும். இது உங்கள் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. 

கண்ணாடியை மேற்கு அல்லது தெற்கு சுவரில் வைக்கக்கூடாது.

வாஸ்து படி, ஒரு கண்ணாடி உடைந்தால், அதில் உங்கள் பிரதிபலிப்பைப் பார்க்கக் கூடாது. கெட்ட சகுனங்களைத் தவிர்க்க, ஒரு நபர் தனது பிரதிபலிப்பைப் புனித குளத்தில் பார்க்க வேண்டும். 

click me!