இந்திய ஜோதிடத்தின்படி, புஷ்பராகம் எனும் மஞ்சள் ரத்தினக் கல் குரு பகவானுடையது. இதை அணிபவர்களுக்கு செல்வம், ஞானம், ஆன்மீகத்தில் மேம்பாடு ஏற்படுகிறது. வியாழன் கிரகம் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குகிறது.
யார் அணியலாம்?
புஷ்பராக கல்லை யார் வேண்டுமானாலும் அணியலாம். இது நிதி வளர்ச்சியை மேம்படுத்தும். உடல்நல பிரச்சனைகளிலிருந்து மீள உதவுகிறது. குரு பகவானுக்கு தான் நவகிரணங்களில் முதன்மையான இடம். கனக புஷ்பராக கல் மீனம் ராசிக்காரர்கள் அணியலாம். வியாழன் திசையை கொண்டுள்ளவர்களும் இதை அணியலாம். தனுசு ராசியினரும் கனக புஷ்பராகம் அணிந்து கொள்ளலாம். 3,12,21 ஆகிய தேதியில் மண்ணுலகிற்கு வந்தவர்கள் இதை அணியலாம்.