முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான சிவபெருமான் பல பெயர்களாக போற்றி பாடப்பட்டிருக்கிறார். பக்தர்கள் நடராஜராகவும், சிவலிங்கமாகவும், ருத்ராட்சமாகவும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிவன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் அந்தத் தலத்துக்கே உரிய ஒரு சிறப்புப் பெயரால் சிவபெருமான் போற்றப்படுகிறார். குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்தம்பேஷ்வர மகாதேவர் கோவிலில் அருள் பாலிக்கும் சிவனை தரிசனம் செய்ய நாட்டின் பல இடங்களிலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.