மாதத்தின் முதல் நாளில் இதை வாங்குங்க.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.. வீட்டில் பணவரவு அதிகரிக்கும்!!

Published : Feb 15, 2024, 10:46 AM ISTUpdated : Feb 15, 2024, 02:55 PM IST

வழிபாடுகள், மரபுகள் மற்றும் சடங்குகளுக்குப் பின்னால் சில அர்த்தங்கள் உள்ளன என்று பெரியவர்கள் சொல்வார்கள். மாத தொடக்கத்தில் என்ன பொருள் வாங்கினால் மகாலட்சுமியை வீட்டுக்கு அழைக்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.  

PREV
18
மாதத்தின் முதல் நாளில் இதை வாங்குங்க.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.. வீட்டில் பணவரவு அதிகரிக்கும்!!

உப்பில்லாத உணவு குப்பையில் சேரும் என்று சொல்வதினால் நாம் உண்ணும் உணவில் உப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம். உணவில் உப்பு இல்லையென்றால் அது வெஸ்டு தான். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி, பாற்கடலின் சங்கடத்திலிருந்து தோன்றினாள். லட்சுமி அவதரித்த அந்தக் கடலில் உப்பும் இருக்கிறது. எனவே லக்ஷ்மி தேவி உப்பில் வசிப்பதாக நம்பப்படுகிறது. உப்பு லட்சுமி தேவியின் அங்கம் என்று கூறப்படுகிறது.

28

எனவே, மாதத்தின் முதல் நாளில் உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் லட்சுமி தேவியின் வீட்டிற்குள் பணமழை பொழிவாள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவது நல்லது. இதன் அடிப்படையில் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமி தேவியாக வழிபடுகின்றனர். அதனால்தான் கிரகப் பிரவேசத்தின் போது புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லப்படுவது உப்புதான்.

38

லட்சுமியின் குணாதிசயமான உப்பை மாதத்தின் முதல் நாள் அல்லது முதல் வெள்ளிக்கிழமையில் வாங்கினால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்றும், நம் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்றும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, கல் உப்பை வாங்குவது நல்லது.

48

ஆகையால், மாத தொடக்கத்தில் உப்பு வழங்கினால் வீட்டில் வறுமை நீங்கி, பணவரவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் உப்பு வாங்கி வைத்தால் வருமானம் பெருகும். அதை போல் வெள்ளிக்கிழமைகளில், காலை 6 மணி முதல் 6:15 மணி வரையிலும், மதியம் ஒரு மணி முதல் 1:15 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 8:15 மணி வரையிலும் கடையில் உப்பு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். வாரந்தோறும் சிறிதளவு உப்பு வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். கல் உப்பு மகாலட்சுமியின் அங்கம் என்று கூறப்படுகிறது.
 

58

மணம் இல்லாத வீட்டில் உப்பு சேர்ந்தால் செல்வம் பெருகும். எனவே மாதத்தின் முதல் நாளிலோ அதற்கு முன்னதாகவோ வீட்டை சுத்தம் செய்வது நல்லது. அதன் பிறகு உப்பு வாங்குங்கள்.

இதையும் படிங்க:  வீட்டில் நிம்மதி இல்லை.. செய்யும் வேலை தடை ...எதிர்மறை ஆற்றல் நீங்க உப்பை இப்படி பயன்படுத்துங்க..!

68

கல் உப்பு மகாலட்சுமியின் அமைப்பு. எனவே, அதை அசுத்தமான கைகளால் தொடக்கூடாது என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. மீறினால் நிதிச் சிக்கல்கள் ஏற்படும், வறுமை மேலோங்கும். எனவே, உப்பை தூய்மையாக் இருக்கும் போதுதான் வாங்க வேண்டும்.

இதையும் படிங்க:  வீட்டில் ஓயாத பிரச்சனை? உப்பு ஜாடி சரியான இடத்தில் இருக்கா? இல்லேன்னா இதுதான் காரணம்..

78

உப்பை கை தவறி கீழே கொட்டுவது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. எனவே, உப்பு தரையில் விழும்போது,   அதை கால்களால் சுத்தம் செய்யாமல்,  ஈரமான துணியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

88

அதுபோல், கல் உப்பை மாதம் ஒருமுறை வீட்டின் மூலைகளில் வைக்கவும். பிறகு மாத இறுதியில் பழைய உப்பை நீக்கிவிட்டு, புதிய உப்பைச் சேர்க்கவும். இப்படி செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கும். அமைதியும் ஓய்வும் கிடைக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். எனவே, வீட்டு சமையலறையில் உப்பு இல்லாமல் இருக்கவேகூடாது. உப்பு இருந்தால் மகாலட்சுமி அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

Read more Photos on
click me!

Recommended Stories