1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!

Published : Dec 24, 2025, 04:11 PM IST

97 லட்சம் வாக்காளர்களை காணவில்லை. ஆனால் இப்போது திமுகவிடம் இருந்து சத்தம் வரவே இல்லை’’ என சந்தேகம் கிளப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

PREV
14

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். மு.க.ஸ்டாலின் தொகுதியில் மட்டும் ஒருட்ச்ம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினோ, திமுகவினரோ யாருமே வாய் திறக்கவில்லை என குற்றம் சுமத்துகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்‘‘இன்னைக்கு ஒரு கோடி பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுள்ளார்கள். ஸ்டாலின் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர். அது தப்பா? ரைட்டா ? அது சரி என்றால் இவ்வளவு நாள் அவர்களை எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள்? உங்க சிஸ்டம் எப்படி அனுமதித்தது? முதலமைச்சர் தொகுதியில் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அது குறித்து முதலமைச்சர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? துணை முதலமைச்சர் தொகுதியில் 89 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். அது குறித்து உதயநிதி என்ன கருத்து தெரிவிக்கிறார்? ஒன்னு சரின்னு சொல்லுங்க? இல்ல தப்புன்னு சொல்லுங்க? தமிழ்நாட்டோட இரண்டு முக்கியமான தொகுதிகள். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தொகுதிகள்.

24

முதலமைச்சர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்றால் அது சரியான நடவடிக்கை என்று திமுக ஒப்புக்கொள்கிறதா? அல்லது உண்மையான வாக்காளர்களை நீக்கப்பட்டுள்ளார்கள் என்று திமுக கருதுகிறதா? ஏன் எந்தக் கருத்து சொல்லாமல் திமுக மௌனமாக இருக்கிறது? அதே மாதிரி உதயநிதி ஸ்டாலினின் தொகுதியில் 89 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அது சரி என்று திமுக சொல்கிறதா? அல்லது இல்லை என்று சொல்கிறதா? இரண்டு தொகுதியையும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 89 ஆயிரம் வாக்குகள். அப்படியானால் இவ்வளவு நாள் கள்ள ஓட்டுக்களை வைத்து வெற்றி வாய்ப்புகள் தீர்மானிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

தவறு என்றால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? இவ்வளவு நாள் கள்ள ஓட்டுக்களை வைத்து வெற்றி தீர்மானிக்கப்பட்டது என்கிற கேள்வி எழுகிறது. சரி என்றால் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள். உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஏன் திமுக மௌனம் காக்கிறது? இந்த விஷயத்தில் திமுக எப்படி மௌனம் காக்க முடியும்? கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் நீக்கப்பட்டது இல்லை. கோடி பேர் நீக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தான்.

34

திமுக இதற்கு 24 மணி நேரத்தில் பதில் சொல்லி இருக்க வேண்டும், ஒன்றிய அரசு ஒரு கோடி தமிழர்களை கொன்றுவிட்டது. தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறுவதற்கு செய்த சதி என எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டுமல்லவா? எஸ்.ஐ.ஆர் வருவதற்கு முன் பேய் வரப்போகிறது... பேய் வரப்போகிறது என்றார்கள். பேய் வந்துவிட்டது. இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? இப்போது சத்தம் இல்லாமல் அடுத்த வேலையை பார்க்க போய் விட்டீர்கள். உங்கள் கட்சிக்காரர்கள் தான் முதலில் போய் வாக்காளர் பட்டியலை வாங்கி விட்டு வந்தார்கள். எல்லா ஊரிலும் திமுககாரர்கள் வாங்கி வந்தார்கள். 38 மாவட்ட கலெக்டர்களும் பட்டியலை வெளியிடுகிறார்கள். 38 மாவட்டங்களிலும் போய் வாங்கி வந்தீர்கள்.

44

திமுக புறக்கணித்து இருக்க வேண்டும் அல்லவா? எஸ் ஐ ஆர் பணி நடக்கும் போது முதல் ஆளாக போய் நின்றது நீங்கள். எஸ்ஐஆர் பணி நடக்கும் போது முதலில் பார்மை வாங்கிப் போனவர்கள் நீங்கள். தமிழ்நாட்டில் 80 சதவீதம் ஃபார்மை நிரப்பி கொடுத்தது திமுக ஆட்கள். எல்லாவற்றிலும் முன்னால் நின்றீர்கள். இந்த வாக்காளர் பட்டியலை வெளியிட்டது மாவட்ட ஆட்சியர் தலைவர்கள். தமிழ்நாடு அரசின் கண்ட்ரோலில் இருக்கக்கூடியவர்கள். மாநில அரசு ஊழியர்கள், ஒரு மத்திய அரசு அதிகாரிகளும் கிடையாது. முழுக்க முழுக்க தமிழக அரசு ஊழியர்கள் செய்த வேலை. மாவட்ட ஆட்சியர்கள் செய்த வேலை. 97 லட்சம் வாக்காளர்களை காணவில்லை. ஆனால் இப்போது திமுகவிடம் இருந்து சத்தம் வரவே இல்லை’’ என சந்தேகம் கிளப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories