அறிவாலயத்தின் பலமே இந்த வாக்கு வங்கிதான் எனும் போது, அதை விஜய் தட்டிப் பறிப்பாரா அல்லது திமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதுதான் 2026-ன் மிகப்பெரிய க்ளைமாக்ஸ்.
தமிழக அரசியலில் 'சென்னை' என்பது வெறும் தலைநகரம் மட்டுமல்ல, அது அதிகாரத்தின் அச்சாணி. அந்த அச்சாணியைச் சுழற்றப்போவது யார் என்கிற யுத்தத்தில், தவெகவின் பார்வை இப்போது சென்னையின் பூர்வகுடிகள் மற்றும் தலித் சமூக வாக்குகளின் மீது பதிந்துள்ளது.
தமிழக அரசியலில் "சென்னையை வெல்பவனே கோட்டையை ஆள்வான்" என்பது எழுதப்படாத விதி. காலம் காலமாக திமுகவின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகத் திகழும் சென்னையில், இப்போது விஜய் தலைமையிலான தவெக ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, சென்னையின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தலித் சமூக வாக்குகளை வளைப்பதே விஜய்யின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
24
திமுகவின் ரிசர்வ் வங்கிக்கு செக்
சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசிக்கின்றனர். எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி, இன்று ஸ்டாலின் காலம் வரை இந்த வாக்கு வங்கி பெரும்பாலும் திமுகவின் பக்கமே உறுதியாக நின்றுள்ளது. ஆனால், இப்போது தவெகவின் முக்கியத் தலைவர்களான விஜய், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ராமன் ஆகியோர் சென்னையைத் தங்களின் தேர்தல் களமாகத் தேர்ந்தெடுக்கத் துடிப்பதன் பின்னணியில் இந்த 'தலித் வாக்கு வங்கி' கணக்குதான் ஒளிந்திருக்கிறது.
விஜய் தரப்பு நம்புவது என்னவென்றால்: "காலம் காலமாக திமுகவிற்கு வாக்களித்தும், சென்னையின் பூர்வகுடிகளான தலித் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை" என்கிற அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான்.
34
விஜய்யின் 'சோஷியல் இன்ஜினியரிங்'
விஜய் பெரம்பூரில் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டாலும், அங்குள்ள தலித் வாக்குகளின் செல்வாக்கே அவரை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சென்னையின் வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் இருக்கும் தலித் சமூக இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு, திமுகவின் பாரம்பரிய ஓட்டுகளைச் சிதறடிக்கும் வல்லமை கொண்டது.
ஆதவ் அர்ஜுனா போன்ற வியூக வகுப்பாளர்கள் தவெகவில் இணைந்திருப்பது, தலித், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஒரு 'சோஷியல் இன்ஜினியரிங்' முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரப் பகிர்வு தருவோம்" என்கிற விஜய்யின் முழக்கம், தலித் அரசியலில் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்க முயல்கிறது.
எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கியபோதுகூட சென்னை திமுகவின் வசமே இருந்தது. ஆனால், தற்போது தவெகவின் அதிரடிப் பிரவேசம் சென்னையின் பூர்வகுடி மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சியில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கருதும் தலித் இளைஞர்கள், விஜய்யை ஒரு மாற்றாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னையின் சேரிப் பகுதிகளில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்க்கு இருக்கும் 'மாஸ்' இமேஜ், வாக்குகளாக மாறினால் அது திமுகவிற்குப் பெரும் தலைவலியாக அமையும்.
விஜய்யின் இந்த 'தலித் வாக்கு' வேட்டை வெறும் அரசியல் ஆசை மட்டுமல்ல, அது திமுகவின் வேரை அறுக்கும் ஒரு தீர்க்கமான வியூகம். அறிவாலயத்தின் பலமே இந்த வாக்கு வங்கிதான் எனும் போது, அதை விஜய் தட்டிப் பறிப்பாரா அல்லது திமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதுதான் 2026-ன் மிகப்பெரிய க்ளைமாக்ஸ்.