DMK vs TVK: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலின் விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் வேகமாக பரவி, தமிழக அரசியலில் புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை விமர்சித்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் சமூக வலைதளத்தின் மூலம் பதிலளித்துள்ளார்.
25
தவெக கடும் கண்டனம்
தனது பதிவில், எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை உணராமல் பேசப்பட்ட கருத்துக்கள் ஏற்க முடியாதவை என்றும், அரசியல் நாகரிகம் மற்றும் பதவியின் மாண்பை மதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், "மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டு, அரசியல் விமர்சனங்களுக்கும் எல்லை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் உள்ள பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், சட்டம் ஒழுங்கு நிலையை கண்காணிக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், உதயநிதியை ரிமாண்ட் செய்யும் திட்டம் இல்லை என்றும், காவல்துறை விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
55
நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், விசாரணை முடிந்தவுடன் உதயநிதியை அதே நாளில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. உதயநிதி கைது, அதனை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள், அமைச்சர் ஆனந்தின் பதிலடி பதிவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவை தமிழக அரசியலில் தற்போது முக்கிய விவாதமாக மாறியுள்ளன.