திமுகவின் மூத்த அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரையும் கண்காணிக்கும் பணியை பென் நிறுவனம் கையில் எடுத்தது. ‘ஓரணியில் தமிழ்நாடு’ போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களுடன் கூடிய திட்டங்களை முன்னெடுத்து, கட்சிக்குள் தனது அதிகாரத்தை நிலைநாட்டியது. இதனால் கட்சி நிர்வாகிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் திணறி வந்தனர்.
தவறான அறிக்கைகளும், நிர்வாக மாற்றங்களும்
கட்சித் தலைமைக்கு வேண்டப்பட்டவர்கள், வேண்டாதவர்கள் எனப் பட்டியல் தயாரித்து, பல நிர்வாகிகளின் பதவிகளைப் பறிக்கவும், தங்களுக்குச் சாதகமானவர்களை நியமிக்கவும் பென் நிறுவனம் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளைத் தன்வசப்படுத்தி, கள நிலவரம் குறித்து தலைமைக்குத் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகளை இந்த நிறுவனம் அளித்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.