மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது தேமுதிக முதல் மாநாடு 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைபெற்றது. 25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிருந்து ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து, நகரம் முழுவதும் "விஜயகாந்த் தலையாகவே" தெரிந்தது. இது அவரது அரசியல் பயணத்தின் மைல்கல் என்று கருதப்படுகிறது. இந்த மாநாடு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்தை மக்களிடம் உயர்த்தியது. இந்த மாநாட்டை, அவரது ஆளுமையை தற்போது, விஜய்யின் தவெக மாநாடுகள், பிரச்சாரங்களுடம் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.