‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என சசிகலா அறிக்கைவிட்ட அடுத்த நாளிலிருந்து ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் அடுத்தடுத்து பேசி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கும் சீனியர்கள் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் டி.டி.தினகரன் உள்ளிட்ட சீனியர்கள் ஒன்றிணைந்து சசிகலா தலைமையில் அணிசேர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் உட்கட்சி அரசியல் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது. மிக நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் வரும் அவர் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.