ஆட்சிக் கட்டிலும், அரசியல் பகையும்! கருணாநிதியின் கைதுக்குப் பின்னால் இருந்த அரசியல் கணக்குகள்.!

Published : Mar 20, 2026, 12:50 PM IST

2001-ல் ஜெயலலிதா அரசால் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டது, இரு பெரும் தலைவர்களுக்கு இடையேயான பழிவாங்கும் அரசியலின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இது அனுதாபத்தை ஏற்படுத்தி, 2006-ல் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

PREV
15
வெறும் கைது நடவடிக்கை அல்ல

தமிழக அரசியல் வரலாற்றில் 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி அதிகாலையை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒரு முன்னாள் முதலமைச்சர், நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டு, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட அந்த காட்சி, வெறும் கைது நடவடிக்கை மட்டுமல்ல; அது இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் உச்சகட்டமாகும்.

25
பழிவாங்கக் காத்திருந்த தருணம்

1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில், ஜெயலலிதா மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பாய்ந்தன. குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஊழல் வழக்கில் அவர் சிறை சென்றார். 2001-ல் அதிமுக, தமாகா, பாமக என ஒரு மெகா கூட்டணியுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஜெயலலிதா, தான் அனுபவித்த சிறைவாசத்திற்குப் பதில் சொல்லக் காத்திருந்தார். அதன் விளைவே "மேம்பால ஊழல்" வழக்கு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

35
நள்ளிரவு அதிரடியும்... சிதறிய கதறலும்!

வழக்கமான கைது நடவடிக்கையாக இல்லாமல், ஜூன் 29 நள்ளிரவில் திட்டமிடப்பட்டு ஜூன் 30 அதிகாலை 1 மணியளவில் கருணாநிதியின் இல்லத்திற்குள் அதிரடியாக நுழைந்தது காவல்துறை. 78 வயது முதியவர் என்றும் பாராமல், கருணாநிதியை இழுத்துச் சென்றபோது அவர் போட்ட "ஐயோ... என்னைக் கொல்றாங்களே!" என்ற சத்தம், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று ஜெயலலிதா தரப்பு வாதிட்டாலும், அது ஒரு தெளிவான 'அரசியல் கணக்கு' என விமர்சிக்கப்பட்டது.

45
மத்திய அமைச்சர்களும்... மிரண்ட டெல்லியும்!

இந்தக் கைதின்போது கருணாநிதியைத் தடுக்க முயன்ற மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோரும் காவல்துறையினரால் கடுமையாக நடத்தப்பட்டனர். ஒரு மாநில அரசு, மத்திய அமைச்சர்கள் மீதே கை வைத்தது டெல்லி வரை அதிர்வலைகளை உண்டாக்கியது. இது மாநில மற்றும் மத்திய உறவுகளுக்கு இடையே ஒரு பெரிய விரிசலையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.

55
கைதின் பின்னாலிருந்த அரசியல் கணக்கு

இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் கருணாநிதியின் அரசியல் செல்வாக்கை முடக்க ஜெயலலிதா திட்டமிட்டார். ஆனால், விளைவு தலைகீழாக மாறியது. கருணாநிதி இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் ஒருவித அனுதாபத்தை உண்டாக்கியது.இந்த ஒடுக்குமுறை திமுக தொண்டர்களை வீதிக்கு வந்து போராடத் தூண்டியது.ஜெயலலிதாவின் இத்தகைய அதிரடிப் போக்குகள், பின்னாட்களில் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைய (திமுக-காங்கிரஸ்-இடதுசாரிகள்) மறைமுகக் காரணமாக அமைந்தது.

பாடமாக அமைந்த 2006 வெற்றி 

2001-06 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா நிர்வாகத்தில் கண்டிப்பு காட்டினாலும், கருணாநிதி கைது போன்ற சம்பவங்கள் மக்கள் மனதில் ஒரு வடுவாகவே இருந்தன. 2006 தேர்தலில் கருணாநிதி "இலவச டிவி" உள்ளிட்ட கவர்ச்சிகரமான மற்றும் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

தமிழக அரசியலில் 'பழிவாங்கும் அரசியல்' என்பது ஒரு சுழற்சியாகவே இருந்து வந்தது. 2001 கருணாநிதி கைது என்பது அதிகார மமதையின் வெளிப்பாடா அல்லது சட்டத்தின் கடமையா என்பது இன்றும் விவாதத்திற்குரியது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் - அந்த நள்ளிரவு கைது தான் கருணாநிதி மீண்டும் 2006-ல் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான விதையைத் தூவியது.

Read more Photos on
click me!

Recommended Stories