‘‘எங்களை யார் தொட்டு பார்த்தாலும் நாங்கள் சும்மா விட மாட்டோம். புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட கூடாது. விஜயை யாரும் விமர்சிக்க தயாராக இல்லை’’ என அதிமுக தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘ அண்ணா திமுகவை விஜய் விமர்சிப்பாரேயானால் நிச்சயமாக நாங்கள் சும்மா விட மாட்டோம். அண்ணா திமுகவுக்கு எவ்வளவு சென்னை தொடங்கி இந்திய முழுவதும் கிளை இருக்கிற கட்சி. அதை விஜய் தொட்டு பார்த்திருக்க கூடாது. மீண்டும் சீண்டினால் அவர் கடந்து வந்த பாதையின் முழு விவரங்களை நாங்கள் எடுத்துச் சொன்னால் அவரால் தாங்க முடியாது. எங்களை பொருத்தவரை நாங்கள் எங்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.