சி.ஆர் சஸ்வதியும் அதிமுகவும்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. காலை உணவாக இட்லி சாப்பிட்டார் என கூறி டிரெண்டிங்கில் இடம்பெற்றவர் சி. ஆர். சரஸ்வதி, இவர் 1979 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சுவர் இல்லாத சித்திரங்கள், எங்க சின்ன ராசா, அமைதிப்படை, கர்ணா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஜெயலலிதா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக 1999 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டில், ஜெயலலிதாவால் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.