சிறுவர்களுடன் செல்ஃபி எடுத்து அசத்திய குஷ்பு...தேர்தல் களத்தை தெறிக்கவிட்ட போட்டோஸ்...!

First Published Mar 29, 2021, 6:36 PM IST

வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர்,அமமுக ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் ஐந்து முனை போட்டி நிலவிவருகிறது. அதனால் ‘அன்பான வாக்காள பெருமக்களே’ என்ற பழைய டெக்னிக்கை கையில் எடுத்தால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து கொண்ட வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரிப்பில்ஈடுபட்டு வருகின்றனர்.
undefined
சுயேட்சை வேட்பாளர்கள் முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள்வரை காய்கறி விற்பது, பாட்டு பாடுவது, நாற்று நடுவது, தோசைசுடுவது, மீன் பொறிப்பது என வாக்கு சேகரிக்க பகுதிகளில் தினுசு,தினுசான டெக்னிக்குகளை முயற்சித்து வருகின்றனர்.
undefined
சமீபத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள குஷ்பு வாக்கு சேகரிப்பின் போது உணவகம் ஒன்றில் மொறு, மொறு தோசை சுட்டது சோசியல் மீடியாவில் வைரலானது.
undefined
ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் என்ற பிம்பத்தை உடைத்து தாமரையை மலர வைத்தே தீருவேன் என உறுதி பூண்டுள்ள குஷ்பு தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சிரித்த முகத்துடன் வாக்கு சேகரிப்பில் களக்கும் குஷ்புவிற்கு தாய்மார்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
undefined
வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். காலை, மாலை என வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
undefined
இன்று கோடம்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய டிரஸ்ட்புரம் 1வது தெருவில் இருந்து 10 தெரு வரை வீதி வீதியாக திறந்தவெளி வாகனத்தில் சென்ற குஷ்பு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
undefined
அப்போது தன்னிடம் செல்ஃபி கேட்ட சிறுவர்களுக்கு போஸ் கொடுத்தும், வயதான பெரியவர்களிடம் ஆசி பெற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
undefined
click me!