Published : Feb 10, 2025, 07:26 PM ISTUpdated : Feb 10, 2025, 07:27 PM IST
குழந்தைகள் பொய் சொல்வதை பெற்றோர் திட்டுவதன் மூலம் தடுக்க முயல்கின்றனர். ஆனால், இது தவறு. குழந்தைகள் பொய் சொல்வதைத் தடுக்க 5 நேர்மறையான வார்த்தைகள் உள்ளன.
குழந்தைகள் பேசவும், விளையாடவும், மற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்வது போலவே பொய் சொல்லவும் கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் பிள்ளை உங்களிடம் எதையாவது மறைக்கிறார் அல்லது பொய் சொல்கிறார் என்று நீங்கள் நினைத்தால், இதோ சில உளவியல் குறிப்புகள் உள்ளன.ஆனால். இந்த 5 வார்த்தைகளைச் சொல்லி உங்கள் பிள்ளைகள் பொய் சொல்வதைத் தடுக்கலாம்.
பெரும்பாலும் குழந்தைகள் பொய் சொல்லும்போது, பெற்றோர் அவர்களைத் திட்டுவார்கள் அல்லது அடிப்பார்கள், இது தவறு. இது குழந்தையின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சரி, தவறுகளின் வித்தியாசத்தைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க, திட்டுவதற்கு அல்லது தண்டிப்பதற்குப் பதிலாக நேர்மறையான வழிகளைக் கையாள வேண்டும். உங்கள் பிள்ளை பொய் சொன்னால், அவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தாமல், நம்பிக்கையை வளர்ப்பது அவசியம். குழந்தை பொய் சொல்வதைத் தடுக்கக்கூடிய 5 வார்த்தைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
25
எப்படி தடுப்பது?
"நான் உன்னை நம்பறேன், நீ உண்மையைச் சொன்னா அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகும்."
இந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லும் போது நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள் என்பதை குழந்தை புரிந்து கொள்ளும்போது, அவர்கள் பொய் சொல்வதை பற்றி இரண்டு முறை யோசிப்பார்கள். நேர்மையால் உறவுகள் வலுப்படும் என்றும், அவர்கள் பயப்படாமல் தங்கள் மனதைப் பேசலாம் என்றும் குழந்தைக்குப் புரிய வையுங்கள்.
35
குழந்தைகளிடம் என்ன சொல்ல வேண்டும்?
"நான் உன் பேச்சைக் கேட்கத்தான் இங்க இருக்கேன், உன்னைக் குறை சொல்ல இல்ல."
குழந்தையில் இப்படி கூறுவது பல நேரங்களில் குழந்தைகள் பொய் சொல்வது, பெற்றோர் தங்களைத் திட்டுவார்கள் அல்லது குறை சொல்வார்கள் என்ற பயத்தினால்தான். எந்தக் குறையும் சொல்லாமல் அவர்களின் பேச்சைக் கேட்பீர்கள் என்று நீங்கள் அவர்களுக்கு உறுதியளித்தால், அவர்கள் உண்மையைச் சொல்லத் தயங்க மாட்டார்கள்.
தவறை மறைக்கத்தான் குழந்தைகள் பொய் சொல்கிறார்கள். தவறு செய்வதால் ஒருவர் கெட்டவராக மாட்டார் என்றும், நாம் ஒன்றாகச் சேர்ந்து பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கை அளித்தால், அவர்கள் பொய் சொல்வதற்குப் பதிலாக உண்மையைச் சொல்லப் பழகுவார்கள்.
45
குழந்தைகள் பொய் சொல்வதை எப்படி தடுப்பது?
"நீ சொல்றது எல்லாமே எனக்கு முக்கியம், நான் உன் பேச்சைப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்."
இந்த வார்த்தைகள் குழந்தைக்கு, அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்த்தும். அவர்களின் பேச்சைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று அவர்கள் உணரும்போது, அவர்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
55
குழந்தைகள் நல்ல மனிதராக மாறுவார்கள்
"தைரியமா உண்மையைச் சொல்றது உன்ன நல்ல தலைவனா மாத்தும்."
உண்மையைச் சொல்வதால் அவர்களின் பிம்பம் மேம்படும் என்றும், மக்கள் அவர்களை நம்புவார்கள் என்றும் நீங்கள் குழந்தைக்குச் சொல்லும்போது, அவர்கள் ஒரு நல்ல மனிதராகவும் தலைவராகவும் மாற நினைப்பார்கள்.