டிப்ஸ் 1
உங்கள் வீட்டில் அஞ்சறைப்பெட்டி பயன்பாடு இருந்தால், அதில் போட்டு வைக்கும் பொருள்கள் அதை திறந்து மூடுவதால் சில நாட்களில் நமத்து போகும். இதை தடுக்க அதில் ஒரு காய்ந்த மிளகாய் காம்பினை ஒவ்வொரு கிண்ணத்திலும் போட்டு வைத்து விடுங்கள். பொருட்கள் வீணாகாமல் நீண்ட நாள் இருக்கும்.
உடைத்த கடலை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்தால் நமத்து போய்விடும். எனவே அதை வாணலியில் சூடேறும் பதத்தில் வறுத்து பின் டப்பாவில் அடைத்து வையுங்கள்.
டிப்ஸ் 2:
வீட்டில் நிச்சயமாக, தினமும் சமைக்கும் அரிசி அல்லது பச்சரிசி, இட்லி அரிசி , சிகப்பு அரிசி என எந்த அரியாக இருந்தாலும் அதில் வண்டு, புழு வருகிறது எனில் அதில் நான்கு அந்து பிரிஞ்சு இலைகளை போட்டு வையுங்கள். அவ்வாறு போட்டால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.
டிப்ஸ் 3:
நெய் கெட்டுப் போகக் கூடாது அதேசமயம் அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்க வேண்டும் எனில் அதில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து வையுங்கள்.