Published : Oct 19, 2022, 02:45 PM ISTUpdated : Nov 01, 2022, 09:24 PM IST
Thuni sayam pogamal irukka in Tamil: இந்த தீபாவளிக்கு நீங்கள் போட்ட புது துணிகளில் பண்டிகைக்கு பிறகு, துவைக்கும் போது சாயம் போகாமல் இருக்க இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி பாருங்கள்.
நாம் கடைகளுக்கு சென்று என்ன தான் விலை உயர்ந்த துணிகளை வாங்கினாலும், சுத்தமில்லாத உங்கள் துணிகளை துவைக்க அதை நீங்கள் வாஷிங் மெஷினில் போடுகிறீர்கள்.சில நாட்களிலேயே சில வண்ணங்களில் இருக்கும் துணிகள் சாயம் முழுவதும் நீங்கி மங்கிய நிலையில் இருக்கும்.
24
அதை இரண்டு மூன்று முறை மட்டுமே உபயோகிக்க முடியும்.பின்னர், பழைய துணி போன்று காட்சி தரும். ஒவ்வொரு முறை துவைத்த பிறகும் சாயம் போகாமல் இருக்க அதில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
உங்கள் துணிகளை துவைக்கும் முன்பு அதை எப்படி துவைக்க வேண்டும் என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள். உங்கள் துணிகளைத் துவைக்கும்போது அரை கப் வினிகர் சேர்த்து கொள்ளலாம்.
சூடான தண்ணீரை காட்டிலும், உங்கள் துணிகளை குளிர்ந்த தண்ணீரில் துவைக்கவும். குளிர்ந்த தண்ணீர் சாயம் போகாமல் தடுக்கும்.
துணிகளை நிற வாரியாக பிரிக்கவும். ஒரே நிறமுள்ள துணிகளை ஒன்றாக துவைத்தால் அவற்றின் நிறத்தை அப்படியே வைக்கலாம்.
44
துணிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிடெர்ஜென்ட்டை தேர்வு செய்யுங்கள். அவை நிறங்களை அப்படியே வைக்கும். சாயம்போக விடாது. துணிகளை மிருதுவாகவும், புத்துணர்வு நறுமணத்துடனும் வைக்க உதவும்.