Budhan Peyarchi 2022 Palangal: ஜோதிடத்தில், சூரியனுக்கும் புதனுக்கும் முக்கிய இடம் உண்டு. கடக ராசியில் இவை, இரண்டின் சிறப்பு சேர்க்கை சில ராசிகளுக்கு அனுகூலமான பலன்களை தரும். அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படும் புதன் கிரகம் கிரகங்களின் தளபதியாக உள்ளார். ஜூலை 16 மற்றும் 17 ஆம் தேதி சூரியனும், புதனும் கடக ராசியில் பிரவேசிக்கிறார். அப்படி, சூரியனும், புதனும் ஒரே ராசியில் வருவதால் புத்தாதித்ய யோகம் உருவாக இருக்கிறது.
ஜோதிடத்தின் பார்வையில், புத்தாதித்ய யோகம் மிகவும் முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகம் அமைவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். சில ராசிகளுக்கு பிரச்சனையாக இருக்கும். அப்படியாக யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து க்கொள்வோம்.
36
Budhan Peyarchi 2022 Palangal
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் பெருகும்.திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலையில் உங்கள் பணி பாராட்டப்படும்.நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
46
Budhan Peyarchi 2022 Palangal
மகரம்:
இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். லட்சுமி தேவியின் சிறப்பு அருள் உங்களை தேடி வரும். தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலையைத் தொடங்க மிகவும் சாதகமான நேரம் இதுவாகும். மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள். வேலையில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.கௌரவம், மரியாதை உயரும் வாய்ப்புகள் உண்டு. திருமண காரியம் கைகூடும்.
66
Astrology Tips-People of this sign will become rich in next six months
விருச்சிகம்:
விருச்சகம் ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். பேச்சு வணிகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு நன்மைகள் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது.
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.தொழிலுக்கு ஏற்ற காலம் அமையும்.