சின்சினாட்டி பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர்கள் 128 நாடுகளில் நடத்திய மற்றொரு ஆய்வு, ஸ்மார்ட்போன் பரவலையும் பதின்ம வயதினரின் பிறப்பு விகிதத்தையும் ஒப்பிட்டது. இதில், வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை, கலாச்சாரம் மற்றும் சட்டங்கள் மாறுபட்டிருந்தாலும், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்த வேகத்தில் பிறப்பு விகிதம் குறைந்திருப்பது பொதுவான ஒன்றாக உள்ளது. இது ஒரு "பொதுவான உலகளாவிய தொழில்நுட்ப அதிர்ச்சி" (common global technology shock) என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஸ்மார்ட்போன் மட்டுமே பிறப்பு விகித வீழ்ச்சிக்கு முழு முதற்காரணம் என்று ஆய்வாளர்கள் வாதிடவில்லை. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி, வேலைவாய்ப்பு சூழல், மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பிற காரணிகளும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் வரவு மனித நடத்தை மற்றும் சமூக தொடர்புகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
இந்தியாவிலும் பிரேசிலும் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கூட இப்போது பிறப்பு விகித வீழ்ச்சி வேகமாகப் பதிவாகி வருவது, இந்த உலகளாவிய மாற்றத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
தொழில்நுட்பம் நம் கைகளில் உலகத்தையே கொண்டு வந்து சேர்த்தாலும், அது நம் அடிப்படை மனித உறவுகளிலும், இயற்கை நிகழ்வுகளிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம், எதிர்காலத்தில் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று இந்த ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இதையும் படிங்க : Instagram Update : இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க புதிய வழி : ரீல்ஸ் பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்!