Published : Aug 11, 2022, 09:37 AM ISTUpdated : Aug 11, 2022, 09:39 AM IST
Raksha Bandhan 2022: சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்ஷாபந்தன் நாளில் சகோதரர் கையில் மட்டும், சகோதரிகள் ராக்கி கட்டுவது ஏன் என்பதை தெரிந்து வைத்து கொள்வோம்.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இடையே சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில் ரக்ஷா பக்தன் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் ஆகஸ்ட் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சகோதரர்கள் கையில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம்.
வடமாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற இப்பண்டிகை மதம், ஜாதி, இனம், மொழி என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து கொண்டாடப்படும். இந்த நாளில், பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதர்களாகக் கருதுவோரின் கையில் மஞ்சள் நூல் ஆன ராக்கியைக் கட்டுவார்கள். ராக்கியை ஏற்றுக்கொண்ட ஆண், அந்த சகோதரிக்குப் பரிசுப்பொருள்களை வழங்குவார்கள்.
36
குறிப்பாக, வட இந்தியாவில் இந்தப் பண்டிகை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். தற்போது, இந்த ரக்ஷாபந்தன் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்தவருக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு நெருக்கமானவர்களைச் சகோதரர்களாக நினைத்து ராக்கியை கையில் கட்டியும், பரிசுகளை பெற்றும் மகிழ்வர்.
இதோடு ராக்கியைக் கையில் கட்டிய பெண்ணின் வாழ்க்கையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பக்க பலமாக நிற்பேன் என சகோதர்கள் உன உறுதியளிப்பார்கள். இப்படி, இந்தியாவில் மத வழிபாடுகள் மட்டுமில்லாமல் சகோதரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் இதுப்போன்ற விழாக்கள் தான் நம் இந்தியர்களை மேலும் சிறப்பிக்கிறது.
46
புராணங்களின் படி, ஆண், பெண் சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்ஷாபந்தன் விழா, கிருஷ்ணன், திரௌபதியின் மீது வைத்திருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகிறது. அதன்படி, பகவான் கிருஷ்ணனுக்கு அடிபட்டு ரத்தம் வந்து வலியால் துடித்த போது, அதனை பார்த்த திரௌபதி, தன் புடவையைக் கிழித்து அவரது கையில் ஏற்பட்ட காயத்துக்குக் கட்டு போட்டாள்.
56
திரௌபதியின் பாசத்தைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைந்த கிருஷ்ண பகவான், அவளைத் தன் சகோதரியாகப் பாவித்து 'இனி உன்னை அனைத்துத் துன்பத்திலிருந்தும் காப்பேன்' என்று உறுதியளித்தார். திரௌபதி கிருஷ்ணன் கையில் துணியைக் கட்டிய அந்த நாளே 'ரக்ஷாபந்தன்' என்று சொல்லப்படுகிறது.
ஆவணி மாதப் பௌர்ணமி நாளில்தான் யமனின் தங்கையான யமுனை தன் சகோதரனுக்குக் கையில் புனிதமான ராக்கிக் கயிற்றைக்கட்டி இறப்பில்லாத அமரத்துவத்தைப் பெற்றாள். இந்த நாளில் பெண்கள் யமுனையை வேண்டி கொண்டு தன் சகோதரர்கள் கையில் ராக்கி கயிறு கட்டினால், தன்னுடைய சகோதரர் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்கள் வாழ்வார்கள், என்று கூறப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.