கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல, ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சென்னை தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும், சென்னையில் பல இடங்களில் பலவிதமான போட்டிகள், பண்பாட்டு நடை பயணம், ஓவியக் கண்காட்சிகள், உணவுத் திருவிழாக்கள் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய நாளில் சென்னையின் மிக முக்கியான 4 சிறப்பு அம்சங்களைத் தொிந்து வைத்து கொள்ளுங்கள்.
சென்னையில் மிக முக்கியமான இடம் என்றால், மெரினா பீச். இது இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை. விடுமுறைக்காக சென்னைக்கு வருபவர்கள், இந்த கடற்கரையை பார்க்கலாம் செல்லவே மாட்டார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பேவரைட் லிஸ்டில் கண்டிப்பாக இந்த கடற்கரை இருக்கும். இங்குள்ள தெளிவான கடல் நீா் மற்றும் தண்ணீா் சாா்ந்த விளையாட்டுகள் போன்றவை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். ஜல்லிக்கட்டிற்கான உச்சக்கட்ட போராட்டம் மெரினாவில் நடைபெற்று, வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
35
Madras day celebration
சென்னை ஐஐடி
இந்தியாவில் மிக சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி உள்ளது. படிப்பு மற்றும் பயிற்சிகள் மட்டும் அல்லாமல்,மாணவர்களின் தங்களின் ஆா்வத்திற்கு ஏற்ப பல துறைகளைத் தோ்ந்தெடுத்து தங்கள் திறமையை வளர்த்து கொள்ள எல்லா வசதிகளையும் சென்னை ஐஐடி செய்து தருகிறது.
அதுமட்டுமின்றி, கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் பழைய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய வழிகாட்டி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் சென்னை ஐஐடி உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. மேலும், சென்னை ஐஐடி வளாகத்தில் அதி நவீன திரையரங்கம், திறந்த வெளி திரையரங்கம் மற்றும் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய பல அரங்குகள் போன்றவை உள்ளன.
45
Madras day celebration
சுண்டல்:
சுண்டலில் அதிக அளவு புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் A, B, C,D போன்றவை அதிகம் உள்ளன. இத்தகை ஆரோக்கிய சத்து கொண்ட சுண்டல் சென்னையின் முக்கிய திண்பண்டங்களில் ஒன்றாக உள்ளது. சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் எங்கு பார்த்தாலும், சுண்டல் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆங்கிலயேர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்தது எந்த அளவிற்கு உண்மையோ..? அதே அளவிற்கு அவர்களின் கட்டிடங்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷமாக, தற்போதும் போற்றப்படக்கூடிய சின்னங்களாக விளங்குகின்றன. சென்னை மாநகரத்தின் பெரும்பாலான இடங்களில் ஆங்கிலேயாின் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்து சொல்லும் வகையில் ஏராளமான கட்டிடங்களை இன்றும் நாம் பாா்க்க முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.