Wooden Spoons Cleaning: மரக்கரண்டி எண்ணெய் பிசுக்கு, வாடையை விரட்ட இந்த 1 மேஜிக் பொருள் போதும்!

Published : Jul 25, 2026, 05:45 PM IST

Wooden Spoons Cleaning: மரக்கரண்டிகள் சீக்கிரமே எண்ணெய் பிசுக்கு பிடித்து, நிறம் மங்கிவிடும். வெறும் தண்ணீரில் கழுவினால் இவை முழுமையாக சுத்தமாகாது. மர கரண்டிகளைப் புதிது போல ஜொலிக்க வைக்கவும், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றவும் இதோ சில டிப்ஸ்.

PREV
15
மரக்கரண்டிகளை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்
சமீபகாலமாக கிச்சனில் ஸ்டீல், பித்தளை பாத்திரங்களை விட மரக்கரண்டிகளின் (Wooden Spoons) பயன்பாடு அதிகமாகிவிட்டது. இவை பார்க்க அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். ஆனால், மரப் பாத்திரங்களில் உள்ள ஒரு பெரிய சிக்கல், அவை சீக்கிரமே பொலிவிழந்து, எண்ணெய் பிசுக்கு மற்றும் உணவு வாசனையை உறிஞ்சிக்கொள்ளும். வெறும் சோப்புத் தண்ணீரால் இவற்றை முழுமையாக சுத்தம் செய்ய முடியாது.
25
டீப் கிளீனிங் செய்யுங்கள்

உங்கள் வீட்டு கிச்சனில் உள்ள மரக்கரண்டிகள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க வேண்டுமானால், மாதத்திற்கு ஒருமுறை இந்த 'டீப் கிளீனிங்' முறையைப் பின்பற்றுங்கள். அதற்குத் தேவையான எளிய பொருட்கள் என்னவென்று பார்ப்போம்...  கொதிக்கும் சுடு தண்ணீர். 1-2 ஸ்பூன் பேக்கிங் சோடா. சிறிதளவு தேங்காய் எண்ணெய். ஒரு ஆழமான பாத்திரம் மற்றும் உலர்ந்த துணி.

35
சுத்தம் செய்யும் முறைகள்

*முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். இந்த சுடுதண்ணீர், மரத்தின் துளைகளில் மறைந்திருக்கும் பிசுக்கு மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். 

*கொதிக்கும் நீரில் 1-2 ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலக்குங்கள். இந்தக் கரைசலில் மரக்கரண்டிகளைப் போட்டு சுமார் 15-20 நிமிடங்கள் ஊற விடுங்கள். அப்போது கரண்டியில் சேர்ந்திருந்த அழுக்கு தானாகவே வெளியேறிவிடும். 

*தண்ணீரிலிருந்து எடுத்த பிறகு, சுத்தமான நீரில் ஒருமுறை கழுவி, உலர்ந்த துணியால் ஈரம் இல்லாமல் நன்றாகத் துடையுங்கள். மரப் பாத்திரங்கள் முழுமையாக உலர்ந்து போவது மிகவும் முக்கியம்.

45
புதிது போல ஜொலிக்க எண்ணெய் தடவுங்கள்
மரக்கரண்டி முழுமையாக உலர்ந்த பிறகு, அதன் மீது சில துளிகள் தேங்காய் எண்ணெயை விட்டுத் தேயுங்கள். இது மரத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதுடன், பொலிவிழந்த கரண்டிக்கு புத்தம் புதிய பளபளப்பைக் கொடுக்கும். இது ஒருவித இயற்கை பாலிஷ் போல செயல்படும்.
55
இந்த முன்னெச்சரிக்கைகள் நினைவிருக்கட்டும்

மரக்கரண்டிகளை அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்காதீர்கள், இதனால் மரம் வெடிக்கக்கூடும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அவற்றை நன்கு கழுவி உலர வைத்தே எடுத்து வையுங்கள். பிளாஸ்டிக் அல்லது சிலிகான் கரண்டிகளை விட மரக்கரண்டிகள் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை, ஆனால் சரியான சுத்தம் மிக அவசியம். இந்த எளிய கிச்சன் ஹேக்கைப் பயன்படுத்தி உங்கள் சமையலறை மரப் பாத்திரங்களை ஃப்ரெஷ்ஷாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories