Solar Eclipse 2022: இன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம்..யாருக்கு மிகவும் மோசமானது..? முழு விவரம் உள்ளே..!

First Published Oct 21, 2022, 7:31 AM IST

Solar Eclipse On October 25: இன்று அதாவது அக்டோபர் 25, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த நேரத்தில், யாருக்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை, நாம் இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

சூரிய கிரகணம் 2022: சூரியனுக்கும். பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. இந்த நிகழ்வினை சூரிய கிரகணம் என்கிறோம்.இன்று அதாவது அக்டோபர் 25ல், இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சூரியனின் கதிர்கள் மறையும் நேரம் அசுபமானதாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது அறிசியல் முதல் ஆன்மீகம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். 

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?
 

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் படி, இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன.  சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். அதன்படி, இன்று அக்டோபர் 25, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் ஒரு பகுதி/பிரிவு சூரிய கிரகணமாக இருக்கும். இன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை நீடிக்கும்.. இதில் 4.30 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. 

இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும்.இன்று நிகழும் அபூர்வ  சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டில்  மாலை 5.14 மணிக்கு காணலாம் என அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் தமிழ்நாட்டில் பகுதியளவு சூரியகிரகணம் இன்று ஏற்பட உள்ளது. சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும். தமிழ்நாட்டில் இன்று மாலை 5.14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.  .இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பாா்க்கக்கூடாது.

இருப்பினும், இந்த  கிரகண நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பார்ப்போம்.

solar eclipse 2022

கிரகணம் சமயத்தில் செய்யக்கூடாதவை:

கிரகண சமயத்தில் , கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.  

அதேபோன்று, தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது. 

 கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

சூரிய கிரகணத்தின் போது, உணவு உண்ணவோ கூடாது. இதனால் கிரக நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. அதேபோன்று, கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடனேயே தர்ப்பையை வைத்திருப்பது அவசியம்.

கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை:

கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்யுங்கள். பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். 

கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும். எல்லாவிதமான தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்க, கிரகண நேரத்தில் எல்லா பொருட்களின் மீதும் தர்ப்பையை போட்டு வைக்கலாம்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

கிரகணத்திற்குப் பிறகு தானம் கொடுக்க வேண்டும். கிரகணத்திற்குப் பிறகு, தானம் செய்வது ஐதீகத்தின் படி சிறந்த ஒன்றாகும்.
 
கிரகணம் முடிந்ததும், புனிதமான கங்கை நீரை வீட்டின் மூலைகளில் எல்லா திசைகளிலும் தெளிக்கலாம். அதனால் கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்களின் எதிர்மறை விளைவு நீங்கும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

click me!