இந்த பானங்களை அடிக்கடி அருந்தும் குழந்தைகளுக்கு தூக்கக் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. போதுமான தூக்கம் இல்லாததால், கவனச்சிதறல், நினைவாற்றல் குறைவு, ஆர்வமின்மை மற்றும் மனநிலை மாற்றங்கள் படிப்பில். மேலும், அதிக சர்க்கரை உள்ளதால் உடல் எடை அதிகரிப்பு, பல் சேதம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கும் இது வழிவகுக்கும்.
இதனால்தான் பல எனர்ஜி ட்ரிங்க் தயாரிப்புகளின் லேபிள்களில், "குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை" என்ற எச்சரிக்கை இடம்பெறுகிறது. மேலும், இந்த வகை பானங்களின் விளம்பரங்கள் மற்றும் பெயரிடல் குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் (FSSAI) அண்மையில் கவனம் செலுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் கொடுப்பதற்குப் பதிலாக, பால், இளநீர், மோர், அளவான இயற்கை பழச்சாறு அல்லது வீட்டிலேயே தயாரிக்கும் பழ ஸ்மூத்திகள் போன்ற ஆரோக்கியமான பானங்களை வழங்குவது நல்லது. குழந்தை சோர்வாக இருப்பதாகத் தோன்றினால், எனர்ஜி ட்ரிங்கைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக அதன் காரணத்தை மருத்துவரிடம் ஆலோசித்து கண்டறிவதே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான அணுகுமுறை.