புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமலையில் ஏற்கனவே தர்மரத பேருந்து சேவை வருகிறது. பக்தர்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த இலவச பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், கூடுதல் பேருந்துகள் சேர்க்கப்படுவது காத்திருப்பு மற்றும் கூட்ட நெரிசலை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.