ரயில்வே அமைச்சர் கூறியபடி மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கீழ் பெர்த்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் சிறப்பு வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யும் போது இவர்கள் ஒரு குறிப்பிட்ட லோயர் பெர்த் தேர்வு செய்யாவிட்டாலும், கிடைக்கும் தன்மையைப் பொறுத்து கீழ் பெர்த்களைப் பெறலாம்.
புதிய விதிகளின்படி இனி ரயில்வேயில் கீழ் பெர்த்கள் காலியாக இருந்தால் அவை மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பில் ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 லோயர் பெர்த்கள் உள்லன. ஏசி வகுப்பு 3 டயர் பெட்டியில் (3AC) இல் ஒரு பெட்டிக்கு 4 முதல் 5 லோயர் பெர்த்கள் உள்ளன.
ஏசி வகுப்பு பெட்டியில் 2 டயர் (2AC) இல் ஒரு பெட்டிக்கு 3 முதல் 4 லோயர் பெர்த்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.599க்கு விமான டிக்கெட்! அதுவும் பிரீமியம் கிளாஸ்! நடுத்தர மக்களும் ஜாலியாக பறக்கலாம்!