இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் 'யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா' என்ற அரிய ஓவியம், மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ராஜா ரவி வர்மா இந்திய ஓவியக் கலையின் பிதாமகன் என்று அழைக்கப்படுவதற்கு மிகச்சிறந்த சான்றாக, சமீபத்தில் அவரது "யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா" ஓவியம் படைத்துள்ள உலக சாதனை அமைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் சுமார் 167.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி, இந்தியக் கலைச் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 2025-ஆம் ஆண்டு எம்.எப்.ஹுசைனின் "கிராம யாத்திரை" ஓவியம் 118 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிப் படைத்த சாதனையை, ரவி வர்மாவின் இந்தப் படைப்பு மிக எளிதாக முறியடித்துள்ளது.
24
Most expensive Indian painting ever sold
ஒரு இந்திய ஓவியரின் படைப்பு உள்நாட்டு ஏலத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான விலைக்கு விற்பனையாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஓவியத்தை தொழிலதிபர் சைரஸ் பூனாவாலா வாங்கியுள்ளார். 1890-களில் உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்பு, யசோதை பசுவிடம் பால் கறக்கும்போது குழந்தை கிருஷ்ணன் அருகில் நின்று பால் கேட்கும் மிக அழகான தருணத்தைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிறது. ரவி வர்மாவின் தூரிகையில் உதித்த இந்த ஓவியத்தில் உள்ள ஒளியமைப்பு, துணிகளின் மடிப்பு மற்றும் உணர்ச்சிகள் காண்போரை வியக்க வைக்கின்றன. இவரது ஓவியங்கள் இந்தியாவின் "தேசிய பொக்கிஷங்களாக" அறிவிக்கப்பட்டுள்ளதால், இவற்றை இந்திய எல்லைக்கு வெளியே கொண்டு செல்ல முடியாது. அத்தகைய சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 167 கோடி ரூபாய் என்ற விலை அதன் கலை மதிப்பிற்குச் சான்றாக உள்ளது. ரவி வர்மா ஐரோப்பிய ஓவிய நுணுக்கங்களை இந்தியப் ஆன்மீக மற்றும் கலாச்சாரக் கதைகளோடு இணைத்தவர்
34
Yashoda and Krishna painting price 2026
மகாபாரதம் மற்றும் ராமாயணக் காட்சிகளை அவர் வரைந்த விதம், பிற்காலத்தில் இந்திய சினிமாவின் காட்சியமைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. அம்ரிதா ஷெர்கில், எம்.எப்.ஹுசைன் போன்ற நவீன கலைஞர்களின் படைப்புகள் பல சாதனைகளைச் செய்திருந்தாலும், இந்தியப் பாரம்பரியத்தின் ஆணிவேராகக் கருதப்படும் ரவி வர்மாவின் ஓவியங்கள் இன்றும் உச்சத்தில் இருப்பதை இந்த ஏலம் உறுதிப்படுத்தியுள்ளது. கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முதலீடு என்பதை இந்த 167 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனை உணர்த்துகிறது. இந்தியக் கலை உலகம் உலகளாவிய ரீதியில் கவனிக்கப்படுவதற்கு இத்தகைய சாதனைகள் மிக முக்கியம். குறிப்பாக, பழைய காலத்து ஓவியங்களுக்கு இன்றும் இவ்வளவு பெரிய மதிப்பு இருப்பது, அடுத்த தலைமுறை கலைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது.
44
ராஜா ரவி வர்மா ஓவியம் ஏலம்
ரவி வர்மா அன்று தொடங்கிய அந்த கலைப் புரட்சி, இன்று நூறு ஆண்டுகளைக் கடந்தும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலும், கோடிக்கணக்கான மக்களின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனை, இந்திய ஓவியக் கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். 'ஓவியர்களின் ராஜா' என்று அவர் சும்மா அழைக்கப்படவில்லை என்பதை காலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.