குஜராத்தில் 'டவ் தே' புயல் சேதத்தை நேரடியாக பார்வையிட்ட பிரதமர் மோடி.! புகைப்பட தொகுப்பு...

First Published May 19, 2021, 4:03 PM IST

குஜராத்தில் நேற்று முன்தினம், இரவு கரையைக் கடந்த ‘டவ் தே’  புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. மாநிலத்தில் புயல் மற்றும் வெள்ளத்துக்கு 13 பேர் பலியாகி உள்ளதாகவும், நுாற்றுக்கணக்கான வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர். இந்த இயற்கை சீற்றம் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி, இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இது குறித்த புகைப்படங்கள் இதோ...
 

அரபிக்கடலில் உருவான'டவ்தே' புயல் குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 16 ஆயிரம் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன
undefined
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தால் குஜராத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குஜராத்தின் பெரும்பாலான பகுதியில் இருளில் மூழ்கின
undefined
சாலை ஓரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் அகமதாபாத், வடோதரா , சூரத் உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரத் தாண்டவத்தில் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது.
undefined
அதே போல் டவ்தே காரணமாக யூனியன் பிரதேசமான டையூவின்கடலோரப் பகுதிகள்பெரும் சேதத்திற்கு ஆளாக்கியுள்ளது.
undefined
இந்தியாவின் மேற்கு கரையோர அனைத்து மாநிலங்களையும் புயல் காரணமாக கடுமையான சேதங்களை சந்தித்துள்ள நிலையில், இதனை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு குஜராத் சென்றார்.
undefined
பாவ்நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் புயல் சேதங்களைப் பார்வையிட்டார்.
undefined
அதன் பின்னர் அகமதாபாத்தில் உயர் அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
undefined
வீடு உடமைகளை இழந்து பரிதவித்து வரும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தின
undefined
அதே நேரத்தில், தற்போது மின்சாரம், மற்றும் சாலையில் விழுந்துகிடக்கும் மரங்களை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.
undefined
பிரதமர் மோடி குஜராத் மட்டும் இன்றிபுயலால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளான உனா, டையூ, ஜபராபாத், மஹூவாவையும்பார்வையிட்டார். அதுமட்டுமின்றி சேத விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த
undefined
வெள்ளம் இன்னமும் வடியாத நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தின் மூலம் அதை காணலாம்.
undefined
click me!