டேட்டிங் ஆப்ஸ்கள் இன்றைய இளைஞர்களுக்கு புதிய நண்பர்களைச் சேர்த்து, ஒரே மாதிரி சிந்தனை கொண்டவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் ஒரு வசதியான தளமாக மாறியுள்ளது. ஆனால் இதே தளங்களில் சில குற்றவாளிகளும் புகுந்து, பயனர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு உதாரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், டேட்டிங் ஆப்பில் புதிய கணக்கைத் திறந்த சில நேரத்திலேயே, ஒரு பெண்ணுடன் அறிமுகமானார். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய உரையாடல், விரைவில் நெருக்கமான தொடர்பாக மாறியது. நம்பிக்கையைப் பெற்ற பிறகு, நேரில் சந்திக்க அந்தப் பெண் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, இருவரும் போலீஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தனர். அந்த இரவு, அவர்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தனர். எல்லாம் சாதாரணமாக இருந்தது போல் தோன்றிய நிலையில், அடுத்த நாள் காலை அந்த இளைஞர் எழுந்தபோது, பெண் காணாமல் போனது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.