Aadhaar Ban: இனி 18 வயசுக்கு மேல யாருக்கும் ஆதார் கிடையாது! அதிரடி முடிவு எடுத்த அரசு!

Published : Jun 13, 2026, 10:08 PM IST

Aadhaar Ban: இனி 18 வயசுக்கு மேல யாருக்கும் ஆதார் கிடையாது என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
13
அசாமில் 18 வயசுக்கு மேல் ஆதார் கிடையாது

இந்தியாவில் ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை எல்லாத்துக்கும் ஆதார் தேவை. இதுமட்டுமின்றி ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது என அனைத்துக்கும் ஆதார் அவசியமாகிறது. இந்த நிலையில், அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தடுக்கும் நோக்கில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி புதிய ஆதார் அட்டை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

23
இந்த முடிவு ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆதார் போன்ற முக்கிய ஆவணத்தைப் பெறுவதைத் தடுக்க, இந்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார். அதாவது ஒருவருக்கு அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில் ஆதார் அட்டை தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பதாரர் தகுதியானவரா என்பதை அரசு தீர்மானிக்கும். சில மாவட்டங்களில் ஆதார் பதிவு 100 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. இப்படி கூடுதலாக ஆதார் அட்டை பெறுபவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும் என முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

33
யாருக்கெல்லாம் ஆதார் வழங்கப்படும்?

சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து யாரும் அசாமிற்குள் வந்து ஆதார் அட்டை பெற்றுவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் முதல்வர் தெரிவித்துள்ளார். தேயிலைத் தோட்ட சமூகத்தினர், பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை தொடர்ந்து வழங்கப்படும். ஆனால், ஏப்ரல் 1, 2027-க்குப் பிறகு இந்த சமூகத்தினருக்கும் 18 வயதுக்கு மேல் ஆதார் வழங்கப்படாது.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழக்கம் போல் ஆதார் அட்டை தொடர்ந்து வழங்கப்படும். கடந்த ஆண்டே, பெரியவர்களுக்கு ஆதார் வழங்குவதில் கடுமையான விதிகளைக் கொண்டு வர அசாம் அரசு திட்டமிட்டு வருவதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories