சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து யாரும் அசாமிற்குள் வந்து ஆதார் அட்டை பெற்றுவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் முதல்வர் தெரிவித்துள்ளார். தேயிலைத் தோட்ட சமூகத்தினர், பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை தொடர்ந்து வழங்கப்படும். ஆனால், ஏப்ரல் 1, 2027-க்குப் பிறகு இந்த சமூகத்தினருக்கும் 18 வயதுக்கு மேல் ஆதார் வழங்கப்படாது.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழக்கம் போல் ஆதார் அட்டை தொடர்ந்து வழங்கப்படும். கடந்த ஆண்டே, பெரியவர்களுக்கு ஆதார் வழங்குவதில் கடுமையான விதிகளைக் கொண்டு வர அசாம் அரசு திட்டமிட்டு வருவதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.