படத்தின் தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் கூறுகையில், "இந்த இயக்கம் ஒரு ஆழமான சக்திவாய்ந்த செய்தியை கொண்டு செல்கிறது. இது லட்சக்கணக்கான இளம் மனங்களில் ஒவ்வொரு பணியையும், ஒவ்வொரு தனிமனிதனையும் மதிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும். இது தன்னலமற்ற தன்மை, பச்சாதாபம் மற்றும் தேசத்திற்கான கடமை போன்ற காலமற்ற மதிப்புகளை வலுப்படுத்துகிறது - இது நமது பிரதமருக்கு ஒரு உண்மையான மரியாதை" என்றார்.
மங்கேஷ் ஹடவாலே இயக்கிய இந்தப் படம், ஆனந்த் எல். ராய் மற்றும் மகாவீர் ஜெயின் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. மற்றவர்களுக்காக வாழும் அதன் செய்தி, முதன்முதலில் வெளியானபோது இருந்ததை போலவே இன்றும் பொருத்தமானதாக உள்ளது. தற்போது, இந்த சிறப்பு ரீ-ரிலீஸ், பிரதமரின் உத்வேகமான வாழ்க்கை மற்றும் தத்துவத்திற்கு ஒரு அஞ்சலியாக, அந்த செய்தியை மேலும் கொண்டு செல்ல முயல்கிறது.