இந்த கொடூர விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டதாவது:
"மாளவியா நகர் உணவக தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) மற்றும் CATS ஆம்புலன்ஸ் சேவைகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு பலரை மீட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் டெல்லி அரசு முன்னின்று வழங்கி வருகிறது. இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டெல்லி அரசு உறுதுணையாக இருக்கும்."
விசாரணை தீவிரம்
தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து டெல்லி காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளன.
உணவகத்தில் போதிய தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் (Fire Safety Norms) கடைப்பிடிக்கப்பட்டதா, ஏதேனும் விதிமீறல்கள் அல்லது அலட்சியம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.