ஜி.எஸ்.டி விதிமுறைகளின்படி, புதிய மற்றும் பதப்படுத்தப்படாத காய்கறிகள் ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஒரு விற்பனையாளர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகளை வாங்கி, அவற்றை புதியதாகவும், எந்தவித பதப்படுத்துதலும் இன்றி விற்பனை செய்தால், அதற்கு ஜி.எஸ்.டி வரி பொருந்தாது என்று கிளியர்டாக்ஸ் (ClearTax) போன்ற வரி ஆலோசனை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சமீப காலமாக, கர்நாடகா ஜி.எஸ்.டி துறை டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் வணிகர்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அறிவித்துள்ளது. ஜூலை 12, 2025 அன்று, ஜி.எஸ்.டி பதிவு செய்வதற்கான மொத்த விற்றுமுதல் வரம்பை மீறும் வணிகர்கள், பதிவு செய்யாமல் வரி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அறிவித்ததாக தி எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) செய்தி வெளியிட்டது.
இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட பிறகு, சங்கர்கௌடாவைப் போன்ற பல சிறு வணிகர்கள் யு.பி.ஐ கட்டணங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டு, தற்போது ரொக்கப் பணத்தை மட்டுமே பெற்று வருகின்றனர்.