Published : Jul 25, 2025, 07:58 PM ISTUpdated : Jul 25, 2025, 08:02 PM IST
அக்டோபர் 7, 2023 அன்று நிகழ்ந்த உளவுத்துறைத் தோல்வியைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் உளவுத்துறைப் பிரிவில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அரபு மொழி மற்றும் இஸ்லாமியப் பாடங்களில் பயிற்சி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது.
இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் (IDF) உளவுத்துறைப் பிரிவில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அரபு மொழி மற்றும் இஸ்லாமியப் பாடங்களில் பயிற்சி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று நிகழ்ந்த உளவுத்துறைத் தோல்வியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
24
இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறை இயக்குநரகம்
புதிய பயிற்சித் திட்டம், உளவுத்துறை ஊழியர்களின் பகுப்பாய்வுத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறை இயக்குநரகத்தின் (AMAN) பணியாளர்கள் அனைவரும் இஸ்லாமியப் பாடங்களில் பயிற்சி பெறுவார்கள். மேலும் அவர்களில் 50 சதவீதம் பேர் அரபு மொழிப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இந்த மாற்றத்திற்கு ராணுவ உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷ்லோமி பைண்டர் உத்தரவிட்டுள்ளார்.
34
ஹவுதி மற்றும் ஈராக்கிய மொழிகள்
ஹவுதி மற்றும் ஈராக்கிய மொழி வழக்குகளில் சிறப்புப் பயிற்சி அளிப்பதும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். உளவுத்துறைப் பணியாளர்கள் ஹவுதி தகவல் தொடர்புகளைப் புரிந்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டதால் இந்தப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
ஏமன் மற்றும் அரபு நாடுகளின் பிற பகுதிகளில் 'காட்' எனப்படும் மெல்லக்கூடிய லேசான போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது எனவும் இது அப்பகுதி மக்களின் பேச்சுத் தெளிவைப் பாதிக்கிறது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ராணுவ உளவுத்துறை இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில், “இதுவரை, கலாச்சாரம், மொழி மற்றும் இஸ்லாம் ஆகிய பகுதிகளில் நாங்கள் போதுமான அளவு சிறப்பாக இல்லை. இந்தப் பகுதிகளில் நாம் மேம்பட வேண்டும்.” எனக் கூறியுள்ளார். ராணுவ வானொலியின் நிருபர் டோரோன் காடோஷ், அரபு மற்றும் இஸ்லாமியக் கல்விக்காக ஒரு புதிய துறை கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலிய நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் அரபு மற்றும் மத்திய கிழக்கு ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக TELEM என்ற துறையை மீண்டும் திறக்கவும் இஸ்ரேலிய ராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பட்ஜெட்டைக் காரணமாகக் காட்டி, இந்தத் துறை மூடப்பட்டது. இதன் விளைவாக, அரபு மொழி அறிந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது.