இண்டிகோ சேவைகள் ரத்து காரணமாக பெங்களூரு, டெல்லி, அஹமதாபாத், ஹைதராபாத், சூரத், கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருத்து விமான பயணிகள் வெறுப்படைந்துள்ளனர். இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில் “மோசமான வானிலை, தொழில்நுட்ப சிக்கல், புதிய பணியாளர் விதிமுறைகள் எல்லாம் சேர்ந்து சேவைகளை பாதித்துள்ளன. அடுத்த 48 மணி நேரத்தில் சேவைகள் சீராகும்” என இண்டிகோ அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் 42, டெல்லியில் 38, அஹமதாபாத்தில் 25, ஹைதராபாத்தில் 19, சூரத்தில் 8 மற்றும்கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.