மேலும், காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்கைக்கோளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருவதாகவும், ஜி20 நாடுகளுக்காக இந்தத் திட்டம் செயல்படுவதாகவும் நாராயணன் கூறினார். அதன் பேலோடில் சுமார் 50 சதவீதம் இந்தியாவால் உருவாக்கப்படும், மற்ற பேலோடுகள் இதர ஜி20 நாடுகளில் இருந்து வரும் என்று அவர் தெரிவித்தார்.