குடிமகன்களுக்கு குட் நியூஸ்
மேலும் தமிழக அரசை பொறுத்தவரை மதுபானம் விலையானது அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. பீர்களின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. பிராந்தி மற்றும் விஸ்கியின் விலையும் ஒரு குவாட்டருக்உக 10 ருபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சூழ்நிலையில் குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் 99ரூபாய்க்கு 180மிலி மதுபானங்கள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மதுபான கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, அனைத்து வகையான மதுபானங்களின் விலையையும் மாநில அரசு குறைத்து அறிவித்துள்ளது.