கொரோனா காலத்தில் 'Work From Home' என்பது ஒரு பெரிய தீர்வாக அமைந்தது. இணையம் மற்றும் கணினிகள் மூலம் அலுவலக பணிகள் தடையின்றி நடந்தன. ஆனால் எனர்ஜி லாக்டவுனில் இதுவே மிகப்பெரிய சவாலாக மாறும். மின்சாரம் இல்லையெனில் Wi-Fi, மொபைல் நெட்வொர்க் மற்றும் லேப்டாபில் வேலை செய்வது கடினமாகும். மேலும், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அணைக்கப்படுவது, தொழிற் சாலைகளின் உற்பத்தி குறைக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும்.
கொரோனா லாக்டவுனுக்குத் தடுப்பூசிகள் தீர்வாக அமைந்தன. ஆனால் எனர்ஜி லாக்டவுனுக்கு ஒரே தீர்வு மாற்று எரிசக்தி மட்டுமே. சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியும். கொரோனா நம்மைச் சமூக இடைவெளியைப் பேணக் கற்றுக்கொடுத்தது; எனர்ஜி லாக்டவுன் நம்மை இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துகிறது.