இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், பிறந்த நாள் விழா என எந்த விழாவாக இருந்தாலும் டிஜே மியூசிக் (DJ Music) இல்லாமல் கொண்டாட்டமே இல்லை. காதை பிளக்கும் டிஜே சத்தம் இருந்தால் தான் இந்த விழாக்களே முழுமையடைகின்றன என்ற நிலைக்கு வந்து விட்டோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதே நிலைமை தான். ஆனால், இந்த டிஜே-க்களால் வரும் சவுண்ட் தொல்லை ரொம்பவே அதிகம். வயதானவர்கள், சின்னக் குழந்தைகளுக்கு இந்த அதிக சத்தம் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
திருமண ஊர்வலத்தில் டிஜே சத்தம்
இந்த பயங்கர சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் ஆபத்து என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் சுல்தான்பூரில் விசித்திரமான சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு திருமண ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் டிஜே இசைத்ததால், அருகிலிருந்த கோழிப் பண்ணையில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. டிஜே சத்தம் தாங்க முடியாமல் ஒன்று, இரண்டு அல்ல, 140 கோழிகள் இந்த சம்பவத்தில் இறந்துள்ளன.