அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்து கொண்டு இருந்த டேங்கர் லாரி மீது பின்னால் காய் கறி ஏற்ற வந்த மினி லாரி மோதியது. இதனால், டேங்கர் லாரியின் பின்புற குழாய் வெடித்து கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. எரிவாயு கசிவு காரணமாக கோவை - திருச்சூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.