இந்த நிலச்சரிவால் முண்டகையில் இருந்த 500 வீடுகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், வெறும் 40 வீடுகள் மட்டுமே தற்போது எஞ்சியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளதாகவும், 200 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனவும் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.