பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
போல்ஸ்டர் பீப்பிள்ஸ் பல்ஸ்:
போல்ஸ்டர் பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள முடிவில், என்.டி.ஏ. கூட்டணி 133 முதல் 159 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 75 முதல் 101 இடங்களையும், ஜன சுராஜ் 0 முதல் 5 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட்:
பீப்பிள்ஸ் இன்சைட் வெளியிட்டுள்ள முடிவில், என்.டி.ஏ. கூட்டணி 133 முதல் 148 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 87 முதல் 102 இடங்களையும், ஜன சுராஜ் 0 முதல் 2 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேட்ரிஸ்:
மேட்ரிஸ் வெளியிட்டுள்ள முடிவில், என்.டி.ஏ. கூட்டணி 147 முதல் 167 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 70 முதல் 90 இடங்களையும், ஜன சுராஜ் 0 முதல் 5 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்புகள் என்.டி.ஏ. கூட்டணிக்குச் சாதகமாக முடிவுகளைக் காட்டினாலும், வரும் 14-ஆம் தேதி வெளிவரும் முடிவே இறுதியானது.