சிறுமி தேவன்ஷி குழந்தைப் பருவத்திலேயே கடவுள் பக்தி அதிகம் உடையவராக வளர்க்கப்பட்டுள்ளார். நாள் தவறாமல் மூன்று வேளை கடவுளிடம் பிரார்த்தனை செய்வது சிறுமிக்கு வழக்கப்படுத்தப்பட்டுள்ளது. இவர் துறவியாவதை முன்னிட்டு நேற்று, செவ்வாய்க்கிழமை, அவரது குடும்பத்தினர் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். சிறுமி தேவன்ஷி முன்னிலையில் யானைகள், குதிரைகள், ஒட்டகங்களுடன் மாபெரும் அணிவகுப்புடன் நகரில் வலம்வந்தனர். ஏற்கெனவே இதேபோன்ற பிரமாண்டமான ஊர்வலத்தை பெல்ஜியம் நாட்டிலும் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.