மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு பதற்றமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள எச்பிசிஎல் (HPCL) பாதாளகங்கா எல்பிஜி பாட்லிங் ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Courtesy : thetruth.india Instagram Page