மறுபுறம், ஹைட்ரஜன் ரயிலும் இந்தியாவில் இயங்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் போக்குவரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது சென்னை ஐஐடி மாணவர்கள் ஹைப்பர்லூப் ரயில் சோதனை டிராக்கை உருவாக்குகிறார்கள் என்பதுதான் அது.
மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் டெஸ்ட் டிராக்கை வடிவமைத்துள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.