இந்நிலையில், நேற்று இரவு ஆல்பர்ட் எச்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை முன்பாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட ஆல்பர்ட் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில், நிலை குலைந்த ஆல்பர்ட்டை முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தடுக்க வந்த அவரது நண்பர்கள் சிலரையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.