உள்ள ஒன்னும் போடலையா? பார்த்ததுமே பதற வைத்த யாஷிகா... பிறந்த நாளுக்கு கில்மா உடையில் கவர்ச்சி விருந்து!

First Published Aug 4, 2022, 11:17 PM IST

தன்னுடைய 23 -ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ள யாஷிகா   ஆனந்த் இன்று தன்னுடைய பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். இவர் கவர்ச்சி விருந்து வைக்கும் வகையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் ஹீரோயினாக நன்கு அறியப்பட்ட யாஷிகாவுக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே இருந்த போது சில சர்ச்சைகளில் அவர் சிக்கினாலும், வெளியே வந்த கையேடு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார்.

மேலும் செய்திகள்: வந்தான் ஜெயிச்சான் ரிப்பீட்டு... மீண்டும் திரையரங்கில் ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட போகும் சிம்புவின் 'மாநாடு'..!
 

மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கும், இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ்க்கும் அவ்வப்போது கவர்ச்சி உடையில் தோன்றி தரிசனம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  ஜாம்பி என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சியிலும் தோன்றிய இவர் சென்னை டைம்ஸுக்காக பாராட்டுகளை பெற்றிருந்தார். 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் சர்ச்சை நடிகை? எப்போது துவங்குகிறது நிகழ்ச்சி... பரபரப்பு தகவல்!
 

இதற்கிடையே அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்தது வரும் யாஷிகா கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி அதில் இருந்து மறு உயிர் பிழைத்தார்.

 இரவு பார்டியில் கலந்துகொண்டு தன்னுடைய தோழி மற்றும் ஆண் நண்பருடன் மகாபலிபுரத்திலிருந்து திரும்பிய போது அவரது கார் பாலத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் இவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு, மற்றும் கால்கள் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்: இதில் கூடவா? கவர்ச்சி காட்டுவதில் கூட யாஷிகாவை அட்டை காப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
 

சுமார் 8 மாதம் வரை, ஓய்வில் இருந்த யாஷிகா ஒருவழியாக விபத்தின் தாக்கத்தில் இருந்தும், அதனால் பட்ட காயங்களில் இருந்தும் மீண்டு, மீண்டும் தன்னுடைய பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

தற்போது சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், யாஷிகா இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கையில் பூ கொத்து வைத்து கொண்டு, கருப்பு நிறம் மற்றும் ஸ்கின் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி பதறவைத்துள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. 

click me!