தற்போதுள்ள விதிகளில் வயது வரம்பை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என UPSC தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள விதிகளின்படி, தேர்வெழுத குறைந்தபட்ச வயது 21 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு பிரிவுகளின்படி பின்வருமாறு:
• பொதுப் பிரிவு (General Category): 32 ஆண்டுகள்.
• ஓபிசி (OBC): 35 ஆண்டுகள்.
• எஸ்.சி, எஸ்.டி (SC, ST): 37 ஆண்டுகள்.
ஆகஸ்ட் 1-ஐ கட்-ஆஃப் தேதியாக நிர்ணயம் செய்வதால், மே-ஜூன் மாதங்களில் பட்டம் முடிக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இதை ஜனவரி 1 என மாற்றினால், பல மாணவர்கள் ஒரு வருட தகுதியை இழக்க நேரிடும் என்றும் அவர் விளக்கமளித்தார்.