இந்து சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற இந்துக் கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகிப்பதற்கும், அவற்றின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இந்தத் துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 44,000-க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் மற்றும் சமணக் கோவில்கள் இந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.