இந்த நிலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இணையாக உள்ள சுற்றுலா இடம் தான் வால்பாறை, அங்கும் ஏராளமான பயணிகள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம். வால்பாறைக்கு வருகின்ற நவம்பர் (01.11.2025) ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே, நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும். @ https//www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.